உறவுகள் மேம்பட 18 வழிகள்



1.பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள். (121)

2. பிரச்சனைகள் ஏற்படும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள். (685)

3. எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். (649)

4. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். (92)

5. கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள். (423)

6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். (294)

7. அற்ப விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். (336)

8. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (Superiority Complex) அதே போல் தயக்கத்துடன், பயத்துடன் பேசாமலும் இருக்காதீர்கள். (Inferiority Complex) (124)

9. மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். (Misunderstanding) (99)

10. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒரு நாள் திரும்பும்... (Carrying Tales)

11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adamant Argument) நீங்கள் 'முடியவே முடியாது' என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்... (140)

12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கை விடுங்கள். (Flexibility) (523)

13. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation) திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிகவும் முக்கியம். (362)

14. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள். (Loose Talks) நேரம் தான் விரயம். (196)

15. எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள். (Diplomacy) விட்டுக்கொடுங்கள். (Compromise) (318)

16. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை மனதார உணருங்கள். (Tolerance) (156)

17. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego) வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான். (268)

18. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy) (163)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னடா இது ஒவ்வொரு கருத்துக்கும் முடிவில்() நம்பர் போட்டிருக்கேனே என்று நினைக்கிறீர்களா...? உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்... அது திருக்குறள் எண்கள்... ஒவ்வொரு கருத்துக்கும் பல குறள்கள் உள்ளன... எனக்கு விருப்பப்பட்டதை கொடுத்துள்ளேன்... குறள்களின் விளக்கத்தை நீங்களே படித்துக் கொள்ளுங்களேன்...  


You may also like

1 comment:

  1. மிகவும் நல்லது. மகரிஷியின் வார்த்தைகள் போலுள்ளது.

    ReplyDelete